இசுலாமிய இளைஞன் ,இர்பான் அகமது.
சென்னை ஐ ஐ டி.யில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த பட்டதாரி,தங்கப்பதக்கம் வாங்கியவர்.. திருவல்லிக்கேணியில் வாழ்கிறவர் .
முகம் தெரியாத பயங்கரவாதியான அபுபக்கர் அப்துல்லாவாக இருக்கலாம் என சந்தேகித்து இவரை தேசிய புலனாய்வுத் துறை தேடுகிறது.
அவர் பயங்கரவாதியா? இலங்கை ,தமிழ்நாடு குண்டு வெடிப்புகளுக்கு இவர்தான் மூளையா?
விசுவரூபம் பாணியில் வந்திருக்கிற ‘கிளாஸ் ‘படம். இயக்குநர் மனு ஆனந்துக்கு வாழ்த்துகள்.
முஸ்லீம் என்றாலே தீவிரவாதிகளாக பார்க்கிற பார்வை இந்தியா முழுமைக்கும் இருக்கிறது. சிலர் செய்த பயங்கரவாத செயல்களினால் ஒட்டு மொத்த இசுலாமிய சமுதாயத்தையும் குற்றவாளிகளாக பார்க்கிற நச்சுப்பார்வை சில அரசியல்வாதிகளால் ஏற்பட்டிருக்கிறது.
அதே குற்றச்செயலை,பயங்கரவாதத்தை இசுலாமியன் அல்லாத ஒரு இந்தியன் செய்திருந்தால் அந்த நச்சுப்பார்வை இந்தியர்கள் மீது ஏன் பாய்வதில்லை?
ஒரு காட்சியில் இர்பான்அகமதுவாக நடித்திருக்கிற விஷ்ணு விஷால் இதை கேட்பார். .நியாயமான,ஆணித்தரமான வசனம் .!
இவர் முஸ்லீம் என்பதினாலேயே வேலைக்கான இன்டர்வியூக்களில் அந்த சமுதாயம் தொடர்பான கேள்விகளை கேட்பது என்ன நியாயம்? இர்பானை வெறுப்படைய செய்கிற அந்த கேள்விகளால் அவர் வெதும்புகிறபோது ஒரு வேளை அவர்தான் அபுபக்கராக இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுவது நியாயம்தானே .!
ஆனால் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரும் , ( மாலா பார்வதி ) மகனான இர்பானும் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிற குடும்பம் என்பதையும் மறுபக்கம் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார் இயக்குநர்.இதனால் கதையின் போக்கில் வேகம் இருக்கிறது.
மற்றொரு பக்கம் தேசிய புலனாய்வுத் துறை ,
அபூபக்கர் அப்துல்லாவை தேடப்படும் முக்கியமான பயங்கரவாதியாக அறிவித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிவிடுகிறது. அட்வைசர் அஜய் திவான் (கவுதம் மேனன்.)
இசுலாமிய மதகுருவான ஜாஜி மன்சூல் தன் மீது சந்தேகம் வராதிருக்க தந்திரமாக இர்பானை தேடுதல் வலைக்குள் கொண்டுவந்து விடுகிறார். மன்சூல்தான் அந்த அபுபக்கரா என்கிற சந்தேகம் நமக்கு வருகிறது..! ஆனால் சூழல்கள் இர்பான் மீதே அழுத்தமான சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் தன்னை அபுபக்கராக அறிவிப்பது கூட ஒருவகையான அழுத்தம்தான்!