பி அண்ட் சி ஏரியாவில் கல்லா கட்டினால் போதுமென நினைத்து வசனமும் காட்சியும் ஆரத் தழுவி கலவி செய்திருக்கின்றன. தணிக்கைக்குழுவினர் ‘என்ஜாய் ‘பண்ணியிருக்கிறார்கள்.படத்தின் பெயரும் அதுவே.!
வசதியான வீட்டுப் பையன்களாக மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஷ்குமார் ,
கல்லூரி மாணவிகளாக நிரஞ்சனா, ஜீ.வி.அபர்ணா,ஹாசின் இவர்களின் ஆசைதான் கதைக்கு அடித்தளம். இவர்களுக்கு வருகிற விபரீத ஆசையினால் எப்படியெல்லாம் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பதை சிற்றின்ப வசனம், காட்சி கொண்டு புத்தி சொல்லுகிறார்கள்.
.எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயன்றிருக்கிறார்கள்.
காவல்துறை ஆய்வாளராக பில்லிமுரளி,உல்லாசவிடுதி முதலாளியாக காலாட்படை ஜெய்,உல்லாசத்துக்காகவே அலையும் யோகிராம் ஆகிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவு கே.என்.அக்பர். ரசித்து மலைப்பகுதிகளை படமாக்கியிருக்கிறார்.
கே.எம்.ரயான் இசை .சபேஷ் முரளி பின்னணி இசை . இரட்டை அர்த்தக் காட்சிகளில் பின்னணி இசையில் சவுண்டு அதிகம்.
பெருமாள்காசி எழுதி இயக்கியிருக்கிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் எனும் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
படம் முழுக்க இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் சில இடங்களில் நேரடியாகவே ஆபாச வசனங்கள் மற்றும் காட்சிகள் .யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!!!