உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஏழைகளின் பசியைப் போக்கிடும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய், இன்று 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலமாக ஏழை, எளிய மக்களுக்காக உணவு வழங்குமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு பொது செயலாளர் புஸ்ஸி மூலம் உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று விஜயின் மக்கள் இயக்கத்தினர் ஏழை, எளிய, ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு வழங்கினர். சென்னையில் நீலாங்கரை பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர். திருச்சி விராலிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய தலைவர் பழனி தலைமையில் ரசிகர்கள் 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய, ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு வழங்கினர்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “பட்டினி தினத்தை” முன்னிட்டு ஒருவேளை (மதிய) உணவு வழங்கப்பட்டது