வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ’தளபதி 69’ படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் மூன்று ஆண்டுகள் நடிக்க மாட்டார் என்றும், அவர் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தொடங்கி, அதன் அரசியல் பணிகளில் தீவிரமாக களமிறங்க உள்ளார் என கூறப்பட்டு வரும் நிலையில்,அதற்கு முன்பாக ஒரு பிரமாண்ட அரசியல் படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்திருக்கிறார்.என்கிறார்கள்.
இது குறித்து விஜய் ஏற்கனவே இயக்குனர் ஷங்கருடன் பேசி கதையையும் முடிவு செய்து விட்டதாகவும் அப்படம் விஜயின் 70 வது படமாக உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் தற்போது ’இந்தியன் 2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு பணிகளில் மும்முரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இது வரை வெளியாக வில்லை.