நவ ரத்தினங்களில் அன்பின் ரத்தினமாக கருதப்படுவது மரகதம்… பச்சை நிறத்தில் பளீர் என்று பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் மரகதம், நன்மை, தீமை என இரண்டு முகங்களை கொண்ட ‘நாணயத்தோடு’ இணைந்தால், அதன் விளைவு எப்படி இருக்கும்…. அத்தகைய சுவாரசியமான சிறப்பம்சங்களை உள்ளடக்கி, திகில் கதைக்களத்தோடு உருவாகி வருகிறது ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ டில்லி பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஏ ஆர் கே சரவண் இயக்கி வரும் ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில் தற்போது மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அருண்ராஜா காமராஜ்.