
‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி கதையின் நாயகனாக நடிக்க,இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம், ‘ஆலன்’ இப் ப்படத்தில் வெற்றியுடன் , மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,இப் படம் குறித்து இயக்குநர் பேசுகையில், ” மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம்… இந்தக் களம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும், குளிரும் உடன் பயணித்தது. சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும், காற்றும் இந்த காதலை ஆரத் தழுவியது. வாரணாசியிலும், ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும், கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது. இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்த காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற.. இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.மனோஜ் கிருஷ்ணாவின் இசையில், சங்கர் மகாதேவனின் வசீகர குரலில் ‘வாரணாசியில் மனித பிறப்பின் ரகசியங்களை சிவனைப் பார்த்து கேட்பது போல்..’ ஒரு பாடலும்.., இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் காந்தக் குரலால், ‘காதலில் பரிதவிக்க ஒரு பாடலும்’… . பாடகிகள் சின்மயி மும்பை நிகிதா காந்தி ஆகியோரின் குரல்களில் காதலை ஆரத் தழுவ தலா ஒரு பாடலும்..என இந்த நான்கு பாடல்கள் விரைவில் உங்கள் செவி வழியாக இதயத்தில் தஞ்சமடையவும் காத்திருக்கிறது.” என்கிறார்.