தமிழில் நாடோடிகள்’, ஈசன், குற்றம் 23, நிசப்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த , நடிகை அபிநயா ஆனந்த், கடந்த 15 வருடமாக காதலித்து வந்த தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை நேற்று ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார்.மணமக்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இவர்களின் திருமண வரவேற்பு விழா வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.