நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற தோரணையில் ஒரு நடிகராய் இருந்து கொண்டு நீங்க பேசாதீர்கள்.என இயக்குனரும் பாஜக பிரமுகருமான பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறொயிருப்பதாவது,”திரு.சத்யராஜ் அவர்களே நீங்கள் யார் தியாகியா? அரசியல்வாதியா? திரைப்பட நடிகரா ? சினிமா தொழிலில் இருந்து கொண்டு நடிகர்களை இனி மேலும் சிறுமைப்படுத்தி பேசாதீர்கள்! உங்கள் மகளுக்கு திமுகவில் பதவி கிடைத்தது எப்படி? தியாகி சத்யராஜ் மகள் இன்று முறையிலா கிடைத்தது? பிரபல நடிகர் மகள் என்று முறையில் தான் உங்கள் மகளுக்கு பதவி கிடைத்தது. உங்களை மேடையில் உட்கார வைத்ததின் காரணம் என்ன? மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவரா? இல்லை மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியா?
உங்களை மேடை ஏற்றியதற்கான தகுதி என்ன? நீங்கள் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று ஒரே காரணம்தான்! ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசுங்கள் அது உங்கள் விருப்பம், அது தவறில்லை.
நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற தோரணையில் ஒரு நடிகராய் இருந்து கொண்டு நீங்க பேசாதீர்கள். இந்த கருத்து உங்கள் முகத்திற்கே முன்னேயும் திரும்பும்.
திரைத்துறையை சார்ந்தவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம். ஆனால் எந்த துறை, எந்த தொழில் நமக்கு சோறு போட்டதோ அந்த தொழிலுக்கு எதிராக இருக்கக் கூடாது! இன்னொன்று சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் போட்டியே வராது. ஏனென்றால் சனாதனம் என்பது சமூக நீதிதான்”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












