சோமீதரன் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் நீளிரா. இதில் நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், விது , கஜராஜ் , சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன் , நமசிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட் , ரோஹித் கொகாடே ஆகியோர் நடித்துள்ளனர். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்க, கே. இசையமைத்துள்ளார்.
1988 ஆம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) படையினருக்கும், இந்திய அமைதி காக்கும் படை (IPKF) படையினருக்கும் இடையே போரின் போது நடந்த, ஒரு சம்பவமே திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அதாவது, போர் பதற்ற சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊரில் விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில், தங்களது சோகங்களை மறைத்து கல்யாணத்திற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே விடுதலைப் புலிகளை அழிக்க, சிறு சிறு குழுக்களாக, இந்திய அமைதி காக்கும் படையைச்சேர்ந்த பல குழுக்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைகின்றனர். அப்படி நுழைந்த குழுக்களில் ஒரு சிறிய குழு, தவறுதலான ஒரு இடத்தில் முகாமிடுகிறது. இதன் காரணமாக, அவர்கள் முகாமிட்ட இடத்தின் அருகே உள்ளே கல்யாண வீட்டிற்குள் பதுங்கிக்கொள்கின்றனர். இது, விடுதலைப்புலிகளுக்கு தெரிய வருகிறது. அதனால், வீட்டினை அவர்கள் முற்றுகையிடுகின்றனர். கல்யாண வீட்டினரின் சந்தோஷம் காணாமல் போகிறது. திட்டமிட்டபடி கல்யாணம் நடந்ததா? என்பதுதான், ‘நீளிரா’ படத்தின் மீதிக் கதை.
இந்திய அமைதிப்படையினைச் சேர்ந்த கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார். விடுதலைப்புலிகளின் படைப்பிரிவின் கேப்டனாக நடித்திருக்கும் சனத், அவர்களது தோற்றத்தினையும் பாவனையினையும் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் கல்யாண வீட்டில், அமைத்திப்படையினரின் கட்டுப்பாட்டில் சிக்கித்தவிப்பவர்களாக நடித்து, தமிழீழப் பெண்களின் த்யரங்களை அப்படியே வெளிப்படுத்துகிறார்கள். நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகாடே ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. கே’ வின் இசையும் காட்சிகளுக்கேற்றபடி அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சோமீதரன், ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் பேச முயற்சித்திருக்கிறார், அது முடியவில்லை. இப்போது நினைத்தாலும் நடுங்க வைக்கும் பல சம்பவங்களை, அலுத்தமில்லாத காட்சிகளால் படமாக்கியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே படபடப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, ‘புலன் விசாரணை’ திரைப்பட கேசட்டின் நடுவே விடுதலைப்புலிகளின் தலைவர் பேசும் காட்சிகள் கொண்ட கேசட்டை ராணுவத்தினர் சோதனை செய்யும் காட்சியியைச் சொல்லலாம்.
இயக்குநர் சோமீதரன், பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு படமாக்கியிருப்பது நன்கு தெரிகிறது.
‘நீளிரா’ – முழுமையற்ற படைப்பு!












