ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப்படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது,
‘இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஒரு கோடி ரூபாயை இன்வெஸ்ட் பண்ணவேண்டும். அதிலிருந்து வாக்களர்களுக்கு காசு கொடுத்து சங்கத்தில் தலைவர், பொருளாளர் என ஏதோ ஒரு பொறுப்பிற்கும் வந்துவிட வேண்டும். அதற்கப்புறம் நீங்கள் தைரியமாக படம் எடுக்கலாம். இதுதான் இன்றைய நிலை.


கேபிள் டிவில ஆடியோ விழாக்களின் வீடியோக்களை கொடுத்து காசு வாங்கி தர்றோம்னு சொல்றீங்க.. அப்படி ஏதோ ஒரு கேபிள் டிவில கொடுத்தா மத்த முக்கியமான சேனல்கள் மூலமா எப்படி அந்தப்படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்..? சின்னப்படங்களை கொல்வதற்கான முயற்சி தான் இது. சரி, அப்படி வரும் காசையும் எங்களுக்கா கொடுக்கப்போறீங்க..? நீங்க வாங்கி வச்சு செலவு பண்ணிட்டு போய்டுவீங்க.
பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, பைரசியை ஒழிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு அவர் கத்துக்கிட்ட வித்தையெல்லாம் காட்டுறேன்னு கோடிக்கணக்கில சங்க காசுல செலவு பண்ணிட்டு கடைசில மத்திய அரசு நினைச்சாத்தான் பைரசியை ஒழிக்க முடியும்னு சொல்றார்..? இதைத்தான் நாங்க ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு வர்றோமே.. இதுக்கு எதுக்காக அவ்வளவு பணம் செலவு பண்ணனும்.?அவர்கள் இப்படி ஒவ்வொரு மேடையிலும் புதிதாக ஏதாவது திட்டம் பற்றி சொல்லும்போது, மீடியாக்கள் தான் கொஞ்சம் கவனம் எடுத்து அவர்கள் இதற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள என கேள்வி எழுப்ப வேண்டும். நடிகர் சங்கத்துல இவங்க குற்றச்சாட்டு அடுக்கினப்போ, சரத்குமார் மீடியாகிட்ட பேசாதீங்க, எங்கிட்ட நேரா வந்து பேசுங்கன்னு சொன்னார். அப்ப நாங்க மீடியாகிட்ட தான் பேசுவோம்னு சொன்ன இவங்க, இப்ப மீடியா கேள்வி கேட்கிறப்ப, நாங்க அதை நேரடியா பேசிக்குவோம்னு சொல்றாங்க..இந்த குறிப்பிட்ட பத்து பேர் மட்டுமே இந்த சினிமா துறை அல்ல. மீதி 9௦ சதவீதம் சின்னப்படங்கள் தான். நாங்க நல்லா இயங்கினோம் என்றால் தான் இந்த பத்து பேருக்கும் பாதுகாப்பு. இவங்க பத்து பேருக்காக மீதி இருக்கிறவங்களை அழிக்க நினைச்சா ஒட்டுமொத்த சினிமாவே அழிஞ்சிரும். எங்களை நோட்டீஸ் கொடுத்து மிரட்டி ஒடுக்கிறலாம்னு நினைச்சுடாதீங்க.. இதைவிட பத்து மடங்கு இன்னும் வீரியமா கிளம்பி வருவோம் இந்த துறைக்கு படம் எடுக்கத்தான் வந்திருக்கிறோமே தவிர உங்களைப்போல பஞ்சாயத்து பண்ணி பணம் சம்பாதிக்க அல்ல. நீங்க மட்டுமே சம்பாதிக்கிறதுக்கு, உங்க படங்களோட பிரச்சனைக்கு கட்டப்பஞ்சாயத்து பண்றதுக்குன்னு மட்டுமே சங்கத்தை பயன்படுத்தாதீங்க” என மிகவும் காட்டமாக சங்கத்தின் நடவடிக்கைளை விமர்சித்தார் சுரேஷ் காமாட்சி.