மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் தனது அரசியல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிலிருந்து இன்று காலை தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திருமண மண்டபத்தில் மீனவர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார். தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த வந்த கமல், தான் சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு என்றார். மே
லும் அதை பாதுகாப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என்றும் கூறினார். பின்னர் மதுரைக்கு செல்லும் வழியில், சொந்த ஊரான பரமக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கும் சென்றார். அங்கு அவர் பேசுவதற்காக மேடைகள் அமைக்கப்பட்டும் அவர் நேரமின்மை காரணமாக வேனிலேயே பேசினார்.
இதை தொடர்ந்து மதுரை வந்த கமல், அங்கு ஏற்கனவே வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்றபடி, அவருடன் ஒத்தக்கடை மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்தார். அங்கு அமைக்கப்பட்ட 40 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பத்தில் தனதுமக்கள் நீதி மய்யம் கட்சிக் கொடியை ஏற்றினார். மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில், கமல்ஹாசன் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் சோம்நாத் பாரதி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து கட்சி அறிமுக மாநாட்டில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ஆளும் கட்சிகளை சரமாரியாக விளாசி தள்ளினார். ம
க்கள் நலனே கட்சியின் கொள்கை.எல்லா முதல்வர்களுக்கும் உள்ள கொள்கை தான் மக்கள் நீதி மய்யத்துக்கும் உள்ளது.தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும், சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும் .சாதி மத பெயர்களை சொல்லிச் சொல்லி செய்த விளையாட்டுகள் நிறுத்தப்பட வே
ண்டும் .பேராசையே பற்றாக்குறைக்கு காரணம் மற்ற மாநிலத்தில் இருந்து தண்ணீர் என்ன, ரத்தத்தைக்கூட பெற்று தர முடியும் . மக்கள் நலனே கொள்கை கோட்பாடு .என்றவர், தனது கட்சியின் சின்னம் குறித்து பேசுகையில், இடது சாரியும் இல்லை வலது சாரியும் இல்லை. அதுதான் நடுவில் மய்யம் என கட்சியின் பெயரில் வைத்துள்ளேன்.கொடியை உற்றுப்பார்த்தால் தென்னிந்தியா மேப் தெரியும். 6 கைகள் 6 மாநிலங்களை குறிக்கும். 6 முனை நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களின் நீதியை மய்யமாக தோன்றிய கட்சி இது
இவ்வாறு அவர் பேசினார்.