சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று மாலை 6.15 மணி அளவில் நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி,துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் , ஏ.எல்.உதயா,விக்னேஷ், பிரேம்,எம்.ஏ.பிரகாஷ், குட்டிபத்மினி, நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .இச்சந்திப்பின் போது,நடிகர் சங்க துணைதலைவர் பொன்வண்ணன் கூறியதாவது, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கியூப்-க்கு இடையே உள்ள பிரச்சனைகளை எல்லாம் விரைவில் களையப்படும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் . இதே போன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.