அரசமரத்துப் பேய் ‘அண்டர் கிராஜுவேட் ‘ என்றால் ஆலமரத்துப் பேய் ‘போஸ்ட் கிராஜுவேட்’டாம்! ஒன்றை ஒன்று போட்டுத்தள்ள உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து திட்டம் போடுகின்றன.அந்த மாதிரிதான் நடிகை ஸ்ரீ ரெட்டி ,டைரக்டர் சேகர் ஆகியோரின் கதையும்!
நேற்று ஸ்ரீ ரெட்டி ‘தன்னை ‘யூஸ்’ பண்ணியதாகவும் ,சிலர் ‘கம்பல்’ செய்தனர் என்றும் சொல்லி இருந்தார். குறிப்பாக டைரக்டர் சேகர் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
நேற்று மந்திர சொம்பை ஸ்ரீ ரெட்டி திறக்க ,இன்று அதிலிருந்து பூதம் வந்து விட்டது.நேற்றே வந்திருக்க வேண்டும். ட்ரெய்ன் லேட் போலும்!
பொங்கி இருக்கிறார் சேகர்.
“நேற்று என்னை அசிங்கப்படுத்தி, பொய்யும் புனை சுருட்டுகளையும் அந்த நடிகை சொல்லி இருக்கிறார்.எனது கனவில் கூட அந்த மாதிரி பெண் வந்ததில்லை.அந்த நடிகையுடன் நேரிலோ,போனிலோ பேசியதும் கிடையாது. அந்த நடிகையின் நோக்கம் தீமையானது. தப்பானது. தர்மம் இல்லை.கடுமையான கிரிமினல் குற்றம். என்னைப் பற்றி அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்ன நினைப்பார்கள்? நான் ஒழுக்கமாக வாழ்ந்து உயிர் விட நினைப்பவன். அந்த நடிகை மன்னிப்பு கேட்கவேண்டும் .இல்லை என்றால் கடுமையான சட்டவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்” என்று டைரக்டர் எச்சரித்திருக்கிறார்.