சுட்டெரிக்கிற பாலைவனம் ஒரு பகுதியில் இருந்தாலும் மறுபகுதியில் பசுமையான சோலைகளும் இருக்கத்தான் செய்கிறது. இயற்கை சில நேரங்களில் தவறுகளை விதைத்து விடும்.அது நேரம் காலம் பார்ப்பதில்லை. விளைந்து விபரீதங்களை ஏற்படுத்திவிடும் .அதை மனித சக்தியால் தடுக்க இயலாதா?
‘முயன்றால் உன்னால் முடியும்’ என்பதை மனிதர்க்கு உணர்த்தவே தெய்வக் குழந்தைகளை சோதனைக் களமாக உருவாக்கி இருப்பானோ? இல்லாவிடில் ராதா அம்மையாரை தந்திருக்க முடியுமா?
ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளை பெற்றவர்கள் எவ்வித கவலைகளை இதயங்களில் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யாராவது அறிந்திருப்போமா?அல்லது உணர்ந்திருப்போமா? சற்று நேர உச்சு கொட்டிவிட்டு வேலைகளை பார்க்க போய்விடுவார்கள்.ஆனால் ராதா அத்தகைய பெற்றோருக்கு பிருந்தாவனமாக இருக்கிறார்.
மணி என்பவர் இயக்கத்தில் இதைப் பற்றி ஒரு குறும்படம் இயக்கி இருக்கிறார். நிவாஸ் இதற்கான கதையில் நடித்திருக்கிறார். குறும் படம் தொடர்பான நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த்,பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் நெகிழ்வான கருத்துகளை வெளியிட்டனர். காலில் விழவும் தயார் என படத்துக்கு காரணமானவர்களை குறிப்பிட்டு சொன்னார்.
அது சரி படத்திற்கு பெயர் என்ன?
‘பேரன்புடன்’! யார் வைத்தது இயக்குநர் ராம்.