‘நம்பிக்கையை விதைப்பது சினிமாதான் ‘ என்று நாங்க எப்போய்யா சொன்னோம்?” என்று சினிமாக்காரர்கள் ஆவேசப்படலாம். “சினிமா ஒரு சூதாட்டம்,அதில ஜெயிக்கிறோமா தோக்குறோமோன்னு தினமும் செத்துப்பொழைக்கிற எங்களுக்கே நம்பிக்கை இல்லாம கெடக்கு. இதில எங்க வெதைக்கிறது?”என்று சூடாக கேட்டாலும் கேட்கலாம். அதுவும் உண்மைதான்!
காலமாற்றம்! ஒரு காலத்தில் நீதி போதனை என்பது ஒரு பாடமாக இருந்தது. இன்று ‘மாரல் கிளாஸ்’ என்பதே இல்லாமல் போய்விட்டது.
அதனால “லாலா கடை சாந்தி “”எவன்டி ஒன்ன பெத்தான்’ போன்ற பாடல்கள் வருவதில் தப்பே இல்லை.
அடுத்து பின்னணி பாடகி ரானினா ரெட்டி கருத்தான ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
“எவடா ஒன்ன பெத்தா?”
சிம்புக்கு பதில் பாட்டா இருக்குமா?
“அப்படியெல்லாம் இல்லிங்க. டைரக்டர் சி.எஸ்.அமுதன் சார் இந்த பாட்டை பாடனும்னு கேட்டார்.மியூசிக் டைரக்டர் கண்ணன் சார் எனக்கு நல்ல அறிமுகம்.கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது” என்ற ரானினா தொடர்ந்து சொன்னதாவது;
“ரொம்பவும் கஷ்டப்பட்டு பாடவேண்டியதில்ல.குடிச்சிட்டு பாடுற ஒரு பொண்ணு எப்படி பாடுவாளோ அந்த மாதிரி பாடுனா போதும்னார்! பிரமாதமாக வந்திருக்கு ” என்கிறார்.’தமிழ்ப்படம் 2.௦ ‘ வரட்டும் .கேட்கலாம்.