கல்யாணம் செய்து வைத்ததுமே பெற்றோரின் கனவு அவர்கள் தாத்தா பாட்டி ஆவதிலேயே இருக்கும்! அதில் ஒரு அற்புதமான சுகம் இருக்கும். மருமகள் வாந்தி எடுக்கிறாளா என்பதிலேயே கவனம் போகும். மூன்று மாதம் ஆனதுமே ‘என்னம்மா தள்ளிப் போடுறீங்களா?’ மாமியார் ஜாடையாக கேட்பாள்.
அந்த கதைதான் நாக சைதன்யா- சமந்தா மேட்டரிலும்!
“நாங்க எப்ப குழந்தை பெத்துகனும்கிறதை ஏற்கனவே தீர்மானம் பண்ணிட்டோம் .எல்லாம் சாய் (கணவர்.) அந்த தேதியை முடிவு பண்ணிட்டார்.அது எப்ப நடக்குமோ அப்ப நடக்கும்”
கலகலவென சிரிக்கிறார், வளையல் ஒலி போல!