திரை உலகம் நடத்திய எத்தனையோ அறவழிப் போராட்டங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டிருக்கிறார் .ஆனால் முதன் முறையாக அவர் களம் இறங்கியது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்,ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆகிய கோரிக்கைகளுக்காக சென்னையில் 10-ம் தேதி நிகழ்ந்த அறப்போரில்தான் !
மாநகரத்தின் மையப் பகுதி.பேரறிஞர் அண்ணா கை உயர்த்தி ‘உனது வெற்றி உறுதி செய்யப்பட்டது’ என சொல்வது போல நிற்கும் அந்த சாலையும் அதை ஒட்டிய பகுதியும் நான்கு மணி நேரம் நில நடுக்கம் கண்டது. தீ பற்றி எரிகிற போது திருவிழா ஒரு கேடா என கேட்கிறார்கள்.
முதல் நாளே இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் மற்ற இயக்குநர்களும் அறிவித்தபடி மாலை ஐந்து மணி அளவில் களம் வரத்தொடங்கி விட்டார்கள்.மக்கள் எதிர்பாராத அளவில் வழக்கமான காஸ்ட்யூமில் வந்து இறங்கினார் வைரமுத்து.
“நான் விவசாயியின் மகன் என்பதால் போராட வந்திருக்கிறேன்.” என்று பேச தொடங்கினார்.
போலீசார் அவர் மீதும் பொதுநலனுக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
“காடு காஞ்சிருச்சு.கத்தாழை கருகிருச்சு ! எலந்த முள்ளெல்லாம் எலையோட உதிந்திருச்சு! வெக்க பொறுக்காம றக்க வெந்த குருவியெல்லாம் வெங்காடு விட்டு வெகுதூரம் போயிருச்சு” என்பது வைரமுத்துவின் வரிகள்.