மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ,உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, ‘உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என உறுதி மொழி ஏற்போம்.மத்திய, மாநில அரசுகளும் அரசியல் சாசனத்தை பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம் நாளை நமதே ‘ என பதிவிட்டுள்ளார்.