“வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்” என்று எழுதவும் தெரியும்.”இவ சித்தூரு சிறுக்கி,செக்ஸான கிறுக்கி, முத்தாடு மீசை முறுக்கி” என மயக்கவும் தெரியும். வரிகளின் ஜனனம் கொடைக்கானலா, கொதிக்கும் சென்னையிலா என்பது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ரகசியம்.
தொட்டெழுதும் மசிக்கு காதலென்ன,காமமென்ன?
ஒயிட் ஸ்கிரீன் நிறுவனத்தின் வி,ராஜாவின் படம்தான் ‘அருவா சண்டை,’ பத்திரிகையாளர் ஆதிராஜன் எழுதி இயக்கம் படம்.
நடன இயக்குநர் தீனா அமைத்திருக்கும் இடுப்பு ஒடிக்கும் நடனத்துக்கு வைரமுத்து எழுதிய பாடல்தான் ‘சித்தூரு சிறுக்கி’ செக்சான கிறுக்கி.முத்தாடு மீசை முறுக்கி!இது சத்தான சரக்கு. ஜி.எஸ்.டி.இல்லை உனக்கு”
இந்த பாடலுக்கு ஆடி இருக்கும் அழகி சுப்ரா கோஷ், பாடியிருப்பவர் அனிதா. இசை தரண். ஒளிப்பதிவு சந்தோஷ் பாண்டி..
ராஜா, மாளவிகா மேனன் முக்கிய வேடங்களை. ஏற்க சரண்யா பொன்.வண்ணன் ,நரேன், சவுந்தர்ராஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
.