பிரமாண்டமான இரண்டு படங்களை அடுத்தடுத்து கையில் வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
பிரமாண்டங்களின் நாயகனாக இருப்பவரை சேற்று வயலில் இறக்கி விட முடியுமா? தயாரிப்பாளர் மணிகண்டன் அவரிடம் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையோ என்னவோ! பதில் நெகட்டிவ்வாக இருந்து விட்டது. இதை சொன்னவர் மணிகண்டன்தான்!
அடுத்து சென்ற இடம் மக்கள் செல்வன் விஜய சேதுபதி அலுவலகம். கதையை கேட்டதுமே சம்மதம் சொல்லி விட்டாராம். இன்றைய விவசாயிகளின் இன்னல்களை சொல்கிற படமாம்! கண்டிப்பாக காவிரியும் வசனங்களில் வரும் அதைப் பேச வேண்டிய சிக்கலில் மாட்டவேண்டாம் எனசூப்பர்ஸ்டார் நினைத்தாரோ என்னவோ ?