முட்டைகளிலிருந்து ஒவ்வொரு பாம்பாக வெளிவருவது போல பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியவர்கள் ஒவ்வொருவராக கிளம்பி வருகிறார்கள்.அது உண்மையா,அல்லது பரபரப்பு செய்தி வழியாக பிரமுகர்கள் பட்டியலில் இணைகிறார்களா என்பது தெரியவில்லை.
கம்பீரம்,என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை ராக்கி சாவந்த். விவகாரமான நடிகை. போன வருஷம் வால்மீகியை வம்புக்கு இழுத்து கைதானவர்.
ராஷ்ட்ரிய ஆம் பார்ட்டியை நிறுவி மும்பையில் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். சினிமா பிரபலம். கவர்ச்சிக் கடல். கான்ட்ரவர்ஸி பிகர் என்றெல்லாம் பெயர் எடுத்த இவர் வாங்கிய மொத்த ஓட்டு எத்தனை தெரியுமா?
வெறும் 15.
காஸ்டிங் கவுச் பற்றி இந்திய திரை உலகில் பரவலாக பலர் பலி ஆன கதையை தற்போதுதான் வெளியிட்டு வருகிறார்கள்.அவர்களில் பலர் ரிட்டையர் ஆனவர்கள் என்பதுதான் கொடுமை.
ராக்கி சாவந்த் சொல்வதையும் கேட்டு வைப்போம்.
“தொடக்க காலத்தில் என்னையும் உடன்படுக்கைக்கு கூப்பிட்டார்கள். நான் எப்படிப்பட்ட ஆளு! புத்திசாலித்தனமாக கழண்டுகிட்டேன்.( அடடே ) சினிமாவில் எல்லாத்துறைகளிலும் செக்சுவல் கரப்ஷன் இருக்கு. ஆனா யாரும் ரேப் பண்ணிட முடியாது. இரு தரப்பு சம்மதம் இல்லாமல் எதுவுமே நடக்காது.இப்ப புதுசா வருகிறவர்கள் குறுக்கு வழியில் உயரத்தில் உட்கார்வதற்கு தப்பாக நடக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் திறமையைத்தான் நம்பனும்.” என்கிறார்.