“எனக்கு அரசியல் தெரியும். தெரிந்துகொண்டால் மட்டுமே போதும். ஒரு இந்தியனாக ஜனநாயக கடமையை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்குச்சாவடியில் செய்து வருகிறேன்.அது போதும்” என்று அழுத்தம் கொடுத்தார் அஜித்குமார்.இது எப்போதோ அவர் சொன்னது.
அவரை அதிமுகவுக்கு இழுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள். பிரபலங்களின் நாடகங்கள் என ஒரு காலத்தில் நிகழ்ந்தன. அந்த தருணத்தில்தான் நான் அவரை ஒருதடவை நேரில் சந்தித்தேன். அன்று எனது பிறந்தநாள்.வீட்டுக்கு அழைத்து வெகு நேரம் பேசினார். அப்போது அவர் மனம் உடைந்து சொன்னவைகளை ஒரு வார இதழில் பதிவு செய்தேன். வால்போஸ்டர் அடித்து இருந்தார்கள்.
“வார்டுக்கு ,மாவட்டத்துக்கு ,இப்படி எல்லாமட்டத்திலும் ரவுடிகள்.! நாடு எப்படி உருப்படும்.?” என்று அவர் சொன்னதை முக்கிய தலைப்பாக்கி இருந்தேன்,எந்த கட்டத்திலும் அரசியலைப்பற்றி பேசவே இல்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் அரசியல் பற்றி பேசுவதற்கு அருவருப்பாக இருப்பதைப்போல உணர்த்தினார்.
அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவதன் வழியாக அவரை அரசியல்வாதியாக மாற்ற இயலாது.
அவர்கள் ஏமாறுவார்கள்.என்பதே உண்மை!