சரிகாவை எந்த அளவுக்கு கமல்ஹாசன் நேசித்தார் என்பது நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும்.
“என்னை அப்படியே இறுகத் தழுவிய கமல்’இந்த முறை எந்த முட்டாள்த் தனத்தையும் செய்து விடாதே’என்று சொன்னபோது நான் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே கிடையாது ” என உணர்வு மேலிட சரிகா தழு தழுத்ததை மறந்து விட முடியாது.
எதற்காக அப்படி மனம் உருகினார்?
ஒரு பிளாஷ்பேக் போகலாம்.
“எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியபங்கு ஹைதராபாத்துக்கு இருக்கிறது. அங்கு நான் அவரை சந்தித்தபோது’இப்போது நான் உண்டாகி இருக்கிறேன்’ என்பதைச்சொன்னேன்.இந்த குழந்தையை நானே வளர்க்கப்போகிறேன்.அப்பா யார் என்பதையும் சொல்ல மாட்டேன். யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை” என்று சரிகா சொன்னதும் கோபத்துடன் குறுக்கிட்டார் கமல்.
“நீ ஒரு முட்டாள்!.என் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கிறாய். எனக்கே சொந்தமானதை ஏன் மறைக்க வேண்டும்?.நமது உறவின் அடையாளம்.” என்று சொன்னவர் கமல்.
அவர் மணமானவர் என்கிற அடையாளம் அப்போது அவருக்கு இருந்தது.வாணிக்கு சாஸ்திர முறைப்படி தாலியை கட்டியவர் என்றாலும் நாளடைவில் மன அமைதி சமாதி நிலைக்கு சென்றிருந்தது. அந்த நிலையில்தான் சரிகாவின் காதல் அரும் பொருளாக கிடைத்திருந்தது.
சரிகா கருவுற்றிருந்த விஷயம் வாணிக்கும் தெரியும்! சரி இதையெல்லாம் பின்னர் விரிவாக பேசலாம்.
தற்போது கமலைப் பிரிந்து சரிகா தனியாக மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஏன் கமலுடன் இணைந்து வாழக்கூடாது? இதை ஏன் கமல் சிந்திக்கக்கூடாது?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடத்திய திருமணம். அன்னை இல்லத்தில் அவரும் கமலா அம்மாவும் சேர்ந்து நடத்தி வைத்த கல்யாணம். ‘தாலி கட்டாமல் ஒரு பெண்ணுடன் வாழ்வது வீட்டுக்கு நல்லது இல்ல. நான் சொல்வதை நீ கேளுடா ‘என்று அவர் வலியுறுத்தியதை கமலால் தட்ட முடியவில்லை,
பெரியார் வழியிலிருந்து கமல்ஹாசனை சற்று திசை மாற்றி நடக்க வைத்தவர் பெரியாரால் பட்டம் சூட்டப்பெற்ற முதல் பிள்ளை சிவாஜி கணேசன். இவரது மடியில் தவழ்ந்து வாழ்ந்த செல்ல மகன் தான் கமல்ஹாசன். இவரது காதல் மனைவி சரிகாவுக்கு ஆறாவது மாதம் நடந்து கொண்டிருந்த போதுதான் சரிகாவை தீர்த்துக் கட்டும் முயற்சி நடந்தது.ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ஜீப்பை மோத விட்டனர். அன்று கரு கலைந்திருந்தால் ஸ்ருதிஹாசன் இல்லை. இதைப்போல எத்தனையோ பிரச்னைகளை கமலின் குடும்பம் சந்தித்திருக்கிறது.
தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இருவருடைய வாழ்க்கையும் குறையில்லாமல் இருக்கிறது. ஆனாலும் சிதறிக் கிடக்கிறது குடும்பம். ஒன்று பட்டால் என்ன? வீடு திரும்பும் மனிதனுக்கு சாய்வதற்கு ஒரு தோள் வேண்டாமா?
சிந்திப்பார்களா மகள்களும்!