நடிகையர் திலகம் தெலுங்கில் ‘மகாநடி’யாக பட்டையை கிளப்பி வருகிறது, படத்தைப் பற்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்,
“அவருடன் நான் நடித்த முதல் படம் இன்னமும் நினைவில் இருக்கிறது. உருக்கமான காட்சிகளில் அவர் கிளிசரின் போடாமலேயே கண்ணீர் விட்டு நடித்தார். அவர் எனது நெஞ்சகத்தில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.” என கூறி இருக்கிறார்.
நடிகையர் திலகம் படத்தின் முதல் காட்சியே 1980-ல் மருத்துவமனையில் இருந்துதான் தொடங்குவதாக காட்டுகிறார்கள்..
அடுத்து 1981- பத்திரிக்கை நிருபராக சமந்தா என்ட்ரி!இவருக்கும் பத்திரிக்கை போட்டோ கிராபருக்கும் சாவித்திரியின் கதை தெரிகிறது.
இதன் பிறகு பிளாஷ்பேக்!
விஜயாவாகினியில் கீர்த்தி சுரேஷ்( சாவித்திரி) நுழைகிறார்.
பின்னர் விஜயவாடாவில் சாவித்திரியின் பிள்ளை பிராயத்து நினைவுகள் படமாக விரிகிறது.
நாகேஸ்வரராவாக நாக சைதன்யா வருகிறார்.
தேவதாஸ் படத்தின் படப்பிடிப்பு.
கீர்த்தி-துல்கர் இருவரும் பாடுகிறார்கள். காதல். அவர்களது ரகசிய திருமணம் என கதை செல்கிறது. இடைவேளைக்குப் பின்னர்தான் மாயா பஜார் படப்பிடிப்பு .எஸ்,வி. ரங்கராவின் கேரக்டரில் மோகன்பாபு நடித்திருக்கிறார். சாவித்திரி மதுவுக்கு அடிமையான காரணத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.
பின்னர் கதை கிளைமாக்சை நோக்கி செல்கிறது.
இப்படியாக சுருக்கமாக சாவித்திரியின் வாழ்க்கைப்பாதையை பதிவு செய்திருக்கிறார்கள்.
விஜயா-வாகினியின் படங்கள் ஒளிப்பதிவில் தனித் தன்மையுடன் திகழும். அதே தன்மையில் படம் அமைத்திருக்கிறது.