தாய் வேடம் புனையும் துணை நடிகை அவரே வெளியிட்டிருந்த ஒரு குளியல் படத்தை வெளியிட்டிருந்தேன். சகோதரர் பிரசன்னா மிகவும் வருந்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.அதை தற்போதுதான் பார்த்தேன்.அதற்கு பதிலிட்டுவிட்டு பிரகாஷ்ராஜ் பேட்டியை படிக்க நேர்ந்தது.
ஒரு பத்திரிகையாளனாக பதிவு செய்கிறேன்.
“சாவதற்கஞ்சேல்!
சிதையா நெஞ்சு கொள்!
சீறுவோர்ச்சீறு!
குன்றென நிமிர்ந்து நில்!”—கவியரசு பாரதி எழுதிய வைரமணி வரிகள்.புதிய ஆத்திச்சூடி.
“இந்து மத அமைப்புகளுக்கு எதிராக கருத்துகளைச் சொன்னதற்காக எழுத்தாளர் கவுரி லங்கேஷ்,கல்புர்கி ஆகியோர் படு கொலை செய்யப்பட்டதைப்போல நானும் படுகொலை செய்யப்படுவேன் என மிரட்டுகிறார்கள். சதிகள் நடப்பதாகவும் அறிகிறேன்.” என்கிறார் பிரகாஷ்ராஜ். “நான் நடிகன் மட்டுமல்ல அரசியல்வாதியுமாவேன்” என்கிறார்.
“மோடிக்கு எதிரான கருத்துகளை சொல்கிறேன் என்றால் உண்மைகளை சொல்கிறேன் என்பது பொருள்!.மோடி ஆட்சி செய்யலாம். ஆனால் மதம் ஆட்சி செய்யக்கூடாது. ஆனால் அவர் மதம் சார்ந்த அரசியல்தான் நடத்துகிறார்.”என்கிறார் பிரகாஷ் ராஜ்.
“ஏதாவது ஒரு கட்சியில் இருந்தால்தான் அரசியல்வாதியாக இருக்க முடியும் என்று அர்த்தம் இல்லை.நான் அரசியல்வாதிதான்!” என்கிறார் .