தேர்தல் என்பது விரைவில் வரப்போகிறது என்கிற தகவல் எப்படியோ ரஜினியின் காதுக்கு வந்திருக்கிறது.
இதனால் அமைப்பாளர்கள் ராஜ் மகாலிங்கம், வி.எம்.சுதாகர் இருவரையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார் ரஜினிகாந்த் .
காலா விழா முடிந்த கையோடு முப்பத்திஎட்டு மாவட்ட செயலாளர்களையும் தனது வீட்டுக்கு அழைத்துவிட்டார்.
இன்று காலையில் இருந்து கூட்டம் நடந்து கொண்டிருகிறது.
“நாளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் உங்கள் தொகுதிகளில் நாம் தேர்தலை சந்திக்க முடியுமா? வேட்பாளராக யாரை நிறுத்தலாம்,தனித்துப் போட்டி என்றால் சந்திக்கத் தயார்தானா? மக்களின் மனநிலை உங்கள் தொகுதிகளில் எப்படி இருக்கிறது?
உங்கள் தொகுதிகளில் திராவிட கட்சிகளின் பல எப்படி?
வன்முறை வந்தால் என்ன நடக்கும்?” இப்படி பலவிதமான கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.மேலும் அடுதத மாதம் கோவையில் தனது மன்றமுதல் மாநாட்டை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினாராம்.
போகிற போக்கை பார்த்தால் விரைவில் அதிகாரப் பூர்வமாக கட்சியின் பெயர்,கொடி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறது.
போயஸ்கார்டனில் வெடிகளை வெடிப்பதற்கு தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மீடியாக்களும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் காத்திருக்கிறார்கள்.