அனில் கபூர் மகள் சோனம் -அகுஜா கல்யாணம் முடிந்து இன்னும் தேன்நிலவு கூட செல்லவில்லை.அதற்குள் வம்பாண்டிகள் இம்சைக்கு அடி போட்டிருக்கிறார்கள்.
திருமணம் முடிந்த பிறகு சோனம் தனது பெயருடன் புருஷன் பெயரையும் இணைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் சோசியல் ஆர்வலர்களின் ஆவியில் ஆம்லேட் போட்டிருக்கிறது.
“நீ ஒரு பெண்ணிய வாதி?”
“ஆமா!.நான் உண்மையான பெண்ணியம் பேசுகிறவள்!”- இது சோனம்
“நீ எப்படி புருஷன் பெயரை சேர்த்துக்கலாம்?”
“அதிலென்ன தப்பு? கல்யாணம் முடிந்த பிறகு யாரும் பெயரை மாற்ற சொல்லவில்லை நானே விரும்பி என் புருஷன் பெயரை சேர்த்திருக்கிறேன்.பெண்ணியம்னா என்ன… ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவாய்ப்புகள். நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை செய்து கொள்ள முடியும்.அதற்கான அனுமதியை யாரிடம் பெறவேண்டும்? எனக்கில்லாத உரிமையா?” என்று கேட்கிறார் சோனம்.
உண்மைதானே? கட்டின புருஷனுக்கு கால் அமுக்குவது பெண்ணியமா இல்லையா? அதை சொல்லுங்கம்மா!.