கவர்னர் எடியூரப்பாவுக்கு 15 நாள் டைம் கொடுத்திருக்க கூடாது.அப்படி அவர் செஞ்சுருக்க கூடாது. இதில்,சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு கொடுத்தாங்க ,அவங்களுக்கு என் மதிப்பிற்குரிய வணக்கங்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மகளிர்அணியினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில்,ரஜினிகாந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்திச்சேன்.அதுக்கப்புறம் இளைஞர் அணியினரை சந்திச்சேன் .இப்ப மகளிர் அணி இவங்களை சந்திச்சு இருக்கேன் .ரஜினி மக்கள் மன்றத்துக்கு பெண்கள் மத்தியில் ஒரு அமோக வரவேற்பு இருக்கு. அதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு . உங்களுக்கே தெரியும் பெண்கள் எங்கே இருக்ககாங்களோ அங்கே வெற்றி நிச்சயம். எந்த நாட்டுல பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்களோ அந்த நாடு முன்னேறி வந்துருக்கு.நான் உறுதியா சொல்றேன் ரஜினி மக்கள் மன்றத்திலும் சரி,நான் தொடங்கப்போற கட்சியிலும் சரி ,பெண்களுக்கு மேக்சிமம் முன்னுரிமை இருக்கும் .அவர்களை கட்சியின் எல்லா பணிகளிலும் நான் ஈடுபடுத்துவேன் என்பதை தெரிவிச்சுக்கிறேன். என்றவர்,பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விபரம் வருமாறு,
கேள்வி; மகளிர் அணியினரிடம் என்னென்ன விசயங்களைப்பற்றி விவாதித்தீர்கள்?
பதில்; அதை நான் வெளியில் சொல்ல முடியாது.நாங்கள் பேசியது எங்களுக்குள் தான் இருக்கும்
கேள்வி; உங்களுக்கு 150 தொகுதிகளில் ஆதரவு உள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளதே
பதில்; அது உண்மையாக இருந்தால் சந்தோசம்.
கேள்வி;ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் பட்சத்தில் நான் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்க வேண்டி உள்ளது என கமல் கூறியிருப்பது பற்றி?
பதில்; இன்னும் நான் கட்சியே ஆரம்பிக்கல, அதுக்குள்ளே கூட்டணி பத்தி நான் என்ன சொல்றது.
கேள்வி;கர்நாடக தேர்தல் முடிவுகள் அதைதொடர்ந்து நடந்த சம்பவங்களை எப்படி பாக்குறீங்க?
பதில்;அங்கே அவங்களுக்கு கிடைத்த வெற்றியை நிரூபிக்க போகிறார்கள்,இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக த் தான் பார்க்கிறேன்.
கேள்வி; எடியூரப்பா பதியேற்று, பதவி விலகியதை நீங்க எப்படி பாக்குறீங்க?
பதில்; கவர்னர் 15 நாள் டைம் கொடுத்திருக்க கூடாது.அப்படி அவர் செஞ்சுருக்க கூடாது.கேலிக்கூத்து. இதில்,சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு கொடுத்தாங்க ,அவங்களுக்கு என் மதிப்பிற்குரிய வணக்கங்கள்.
கேள்வி; போரில் வீரமரணம் அடைந்த இலங்கைத்தமிழர்களுக்கு மெரினாவில் அஞ்சலி செலுத்துவதற்கு விதிக்கப்பட்டுள தடை குறித்து?
பதில்; அதற்கு சில காரணங்கள் இருக்கு, காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள்.
கேள்வி;கர்நாடகாவில் புதிய ஆட்சி வந்திருக்கு காவிரி விவகாரத்தில் அவங்க என்ன முடிவு எடுக்கனும்னு நினைக்கீறீங்க?
பதில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கு. அதை அவங்க உறுதியா நிறைவேற்றியே தீரனும். அது அவங்களோட கடமை.ஆணையத்தின் கட்டுபாட்டில் தான் அணைகள் இருக்கணும் . கவர்மென்ட் தலையீடு இருக்குமா என்பதை போகப்போகத தான் பார்க்க வேண்டும்.
கேள்வி:கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கா தது ஏன்?
பதில்; நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கலையே கண்ணா என்றவர், எப்ப தேர்தல் அறிவிப்பு வெளியாகிறதோ, அப்போது என் கட்சி பற்றி அறிவிப்பேன் என சொல்லியிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என பதிலளித்தார்.