“வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத்திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல் வந்தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?” என காதலின் ஏக்கத்தை சொல்வான் பாவேந்தனின் நாயகன்.
காதல் என்பது விலைமகளுக்கு மட்டும் விதி விலக்கா? நித்தமும் எத்தனையோ மனிதர்கள்,கிழவர்கள்,குமரர்கள்.என வந்து ஆரத்தழுவி இன்பத்தை பெற்று செல்வதால் அவளுக்கு காதல் என்பது கனவா?
“இல்லை “என்கிறார் ஷ்ரத்தாதாஸ்.
அவர் நடித்து வரும் படத்தின் பெயர் “ஸ்ருங்கார்தன் ”
குறும்படம்தான் .என்றாலும் காதல் உணர்வுகளை இயக்குனர் தீபக் பாண்டே தீயாக காட்டி இருக்கிறாராம் .
ஷைபா என்பது அவளின் பெயர் .விலைமாது.
ஷ்ரத்தாதாஸ் நடித்திருக்கிறார். விபசாரத்தொழிலை எதிர்க்கிற குப்தா அவளை காதலிக்கிறார். லட்சுமணபுரியில் நடக்கிற கதை.
“இம்மாதிரியான கதைகளில் நடிப்பதன் வழியாகத்தான் நடிப்பின் ஆற்றலை வெளிப்படுத்த முடியும். உணர்வுகள் கொப்பளிக்க நடித்திருக்கிறேன்” என்கிறார் நாயகி,!