பருத்திவீரன் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்ககளை கவர்ந்தவர் ப்ரியாமணி. இவர் இப் படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். ஆனால், தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போய்விட்டார்.தற்போது இவர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம். ஆனால், அவர் சினிமா துறையை சார்ந்தவர் இல்லையாம்.தன் காதலர் யார் என்பதை சொல்ல மறுக்கும் ப்ரியாமணி அடுத்த வருடம் அவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறுகிறார்.