“என் கால்ஷீட்டல்லாம் வேஸ்ட் பண்ணிட்டாங்க. அதனால இன்னும் 2 கோடி அதிகமா கொடுத்தா நடிப்பேன்” என்று விஷால் கூட்டிய பஞ்சாயத்தில் வடிவேலு குமுறியதாக சொல்கிறார்கள்.
இயக்குநர் சிம்புதேவன் தரப்பில் விசாரித்தவரை “இணக்கமான ” போக்குத் தெரிவதாகவே சொன்னார்கள்.
“எப்படியும் ஒரு வாரத்தில் நல்ல முடிவு வந்து விடும் நானே சொல்வேன்” என இயக்குநர் சொல்லி இருந்தாலும் விசாரணைக் குழுவோ வில்லங்கம் நீடிப்பதாகவே சொல்கிறது.
“அண்ணே..இன்னும் தயாரிப்பாளரை நோகடிக்காதிங்க. பெருத்த பட்ஜெட் .வட்டி கட்ட முடியாது. படத்தை நடிச்சு முடிங்க.இல்லேன்னா வாங்குன அட்வான்சை திருப்பிக் கொடுத்திடுங்க!”என்று வடிவேலுவை பாசத்துக்குரிய விஷால் தம்பி எச்சரித்திருக்கிறாராம்.
வடிவேலு வெள்ளைக்கொடி பிடிக்கவில்லை என்றால் எந்த மொழியிலும் நடிக்க முடியாதபடி தடை போடப்படும் என்று சொல்கிறார்கள்.
பாவம்பா! மதுரக்கார மனுஷன்! பாத்து செய்யுங்க.