ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான விஜய் மில்டனின் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் கோலி சோடா 2. இதில்,சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிருஷ்ணா, ரக்ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரஃப் நோட் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் புதிய விளம்பர யுக்தி குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, “நல்ல கதைகள் மீதான நம்பிக்கையும், அவற்றை அப்படியே திரையில் கொண்டு வருவதும் ரசிகர்களை எப்போதுமே ஈர்த்திருக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படத்தின் விளம்பரம், புரோமோஷனுக்காக லட்சம், கோடிகளில் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது , இந்த செலவில் ஒரு பகுதியை ஆக்கபூர்வமான் விஷயங்களுக்கு செலவு செய்ய முடிவு செய்து அதற்காக ‘ஜிஎஸ்டி வண்டி’ என்ற பெயரில் ஒரு வண்டியை உருவாக்கி அதன் மூலம் ‘கோலிசோடா-2’ விளம்பரத்தை செய்ய இருக்கிறோம், இந்த திட்டம் ஆக்கபூர்வமாகவும் மக்களுக்கு உதவும் வகையிலும் இருக்கும் என விஜய் மில்டன் கூறியுள்ளார்.