ஸ்வேதா பாசு .தேசிய விருது நடிகை .இவருக்கும் தயாரிப்பாளர் ரோகித் மிட்டலுக்கும் காதல்.!
ஒரே துறையில் இருப்பவர்கள்.இருவருக்குமே குறும்படங்களில் ஆர்வம் .அதனால் காதல் வயப்பட வாய்ப்புகள் அதிகம்,
அதனால் காதலில் விழுந்ததில் என்னய்யா வெங்காயம் என்று சிலர் கேட்கலாம்.
ஆனால் அவர்கள் சும்மா இருந்தாலும் மற்றவர் யாரேனும் ‘கப்-லிங்க் ‘ போட்டிருந்தால் பிரியமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா!
அதே..அதே! பிரபல தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் தான் உதவியாக இருந்திருக்கிறார்
ஆனாலும் ஸ்வேதாவுக்கு ஒரு கவலை.
“நான்தாங்க முதலில் கோவாவில் வைத்து என் காதலை சொன்னேன். பொதுவா ஆண்கள்தான் முழங்காலிட்டு பூ கொடுத்து ஐ லவ் யூ சொல்வார்கள்.என் விஷயத்தில் உல்டா.
அவர் புனேயில் வைத்து காதலை சொன்னார். அதன் பின்னர்தான் எங்கேஜ்மென்ட் நடந்தது. கல்யாண கார்டு எப்ப தரணும் என்பதை இனிமேல்தான் முடிவு செய்யணும் ” என்கிறார் ஸ்வேதா.
ஆடி மாதத்துக்கு முன்னாடியே கல்யாணத்தை பண்ணிடுங்க!