பிளைட் பறக்கும் வேகத்தில் முடியக்கூடிய அட்வான்ஸ் புக்கிங் ‘காலா’ படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிறது கோலிவுட் ஏரியா.
கவுண்டர் திறந்த சில மணி நேரத்திலேயே ஆல் டிக்கெட்ஸ் சோல்டு அவுட் ஆகிவிடும். இந்த படத்துக்கு ஏனோ ஸ்லோ மோஷனில் நத்தையாக நகர்கிறது என்கிறார்கள்.
முதல் காரணம் ஐ டி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள்தான் முதல் நாள் டிக்கெட்டுகளை மொத்தமாக அள்ளுகிறவர்கள். அவர்கள் எதிர்பார்க்கிற பொழுது போக்கு கதையில் இருக்காது என நினைக்கிறார்களோ என்னவோ!
இரண்டாவது காரணம் 165.78 விலையுள்ள டிக்கெட் 207.25 என உயர்த்தி விற்கப்படுகிறது 120 ரூபா டிக்கெட் நூற்றி ஐம்பது என இதரவரிகளும் சேர்த்து விற்கப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோ வுக்கு ஆயிரம் வரை விலை கொடுத்திருக்கிறார்கள்.அவர்களின் ஆர்வம் குறையவில்லை. ஆனால் ரிலீசுக்குப் பின்னர் இந்த உற்சாகம் இருக்க வேண்டும்.
மூன்றாவது காரணம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ரஜினி சொன்னவை மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை உருவாக்கி விட்டது .”தமிழ்நாடு சுடுகாடாக்கி விடும் என்று அவர் சொன்னதை வேறு மாதிரியாக பார்க்கிறார்கள். ரம்ஜான் டைம் .பள்ளிக்கூடத் திறப்பு என வேறு பல காரணங்களும் சொல்கிறார்கள்.
இதனால்தான் காலா பட அட்வான்ஸ் புக்கிங் கட்டை வண்டி ரேஞ்சுக்கு போய் இருக்கிறது.