நாற்பதாண்டு கால அனுபவசாலி நாசர். தென்னிந்திய நடிகர் சங்கத்தை கரைச்சல் இல்லாமல் கொண்டு செல்பவர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் போட்ட படம் இன்னமும் வெளி வரவில்லையாம்!
வராத படத்துக்கு ஒப்பந்தமா?
“நான் ராம்கி, அருண்பாண்டியன், முரளி ஆகியோர் ஒரு படத்தில் நடித்தோம் அந்த படம் வெளிவரும்வரை வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்பது ஒப்பந்தம். ஆனால் அந்தப்படம் இன்னமும் வரவில்லை.
தற்போது விஜய்சேதுபதி குறுநில மன்னர் போல இருக்கிறார். பேரரசாக வருவார்,தன்னிலை மாறாமல் இருப்பதுதான் தமிழ்ச்சினிமாவில் அவசியம்.அது சேதுபதிக்கு இருக்கிறது” என்று பாராட்டினார் நாசர்.