பேரன்,பேத்தி வந்தாலும் கிழட்டு வயதிலும் ஒப்பனையோடு ஹீரோவாக நடிக்கிற பேரதிர்ஷ்டம் ஆண்களுக்குத்தான். கல்யாணம் ஆகிவிட்டால் ஹிரோயினுக்கு அத்தை,அக்கா, பாட்டிதான்!
சினிமாவில் வாய்ப்பு இல்லையா , ஒதுங்குவதற்கு இருக்கவே இருக்கிறது சின்னத் திரை!
தலை நரைத்து விட்டால் ஹீரோ சாயம் பூசிக்கொள்வார். முகச்சுருக்கம் விழாமல் இருக்க ‘போடேக்ஸ்’ ஊசி போட்டுக் கொள்ளலாம்.சொட்டை விழுந்து விட்டால் விக் வைத்துக் கொள்ளலாம்,
ஆனால் இவையெல்லாம் அவசியம்தானா? சாக்லேட் பாய் என டீன் ஏஜ் பெண்கள் கொண்டாடிய மாதவன் என சொல்கிறார்?
” தலை நரைத்து விட்டது ,டை அடிக்கிறீர்கள் என்றாலே வயசாகிப்போச்சுன்னுதான் அர்த்தம்!அதான் உண்மை. ஆனால் தன்னை இளமையுடன் காட்டுவதற்கு அதெல்லாம் அவசியம்னா அது தப்பில்ல.
ஆனால் நான் வயசப்பத்தி கவலைப்பட்டதே இல்ல.உடம்பு நல்ல பிட்னசுடன் இருக்கு.நன்றாக வைத்துக் கொண்டிருக்கேன். உங்களுக்கு கம்பர்ட்டபிளா இருக்கிற வரைதான் இமேஜ்! வெளியே போகிறபோது நான் ஒரு போதும் மேக் அப் போட்டுக் கொண்டது இல்ல.”என்கிறார் மேடி!
“உண்மைகளை ஓங்கி உதைத்தும்,பொய்யை காலால் மிதித்தும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நேரிய வழியில் செல்லும் ஒருவனுக்கு சுய தரிசனம் கிடைக்கிறது”—-கவியரசர் .