சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது போல பல தமிழ்ச்சினிமா நடிகர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். சிலர்தான் “தப்பித்து வந்தானய்யா,, தலை தப்பி பிழைத்தானையா” என்று தம் பிடித்து நிற்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் சித்தார்த். இவருக்கு ‘அவள்’ ஹாரர் திரில்லர் படம் நல்ல பெயரை வாங்கித் தந்தது என்றாலும் வரவு வகையறாவில் அவ்வளவு திருப்தி இல்லை.
டைரக்டர் சாய் சேகர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் படத்தில் சித்தார்த்- கேத்தரின் தெரசா இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.
“சித்தார்த்-கேத்தரின் இருவரையும் மனதில் வைத்துத்தான் கதை பண்ணிருக்கேன். இன்னொரு முக்கிய கேரக்டரில் ஒரு பிரபலம் நடிக்கிறார்.அவரின் பெயரை படம் முடிந்த பிறகு ரிலீஸ் டைமில்தான் சொல்வோம்.ஜூலை 13-ல் படப்பிடிப்பு ஆரம்பம். தமன் தான் மியூசிக்.ஏகாம்பரம் கேமரா.படத்தில் முக்கால் மணி நேரத்துக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இருக்கு” என்கிறார் சாய் சேகர்.