‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் முடித்து விட்டு, கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த படக்குழுவினர் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை ராஜமுந்திரி கிளம்பியுள்ளனர். சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக நடிக்கும் ‘விசுவாச’த்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ராஜ்முந்திரியில் இன்று முதல் முழுவேகமெடுக்க உள்ளதாம். மதுரை, தேனி பின்னணியில் நடக்கும் குடும்ப கதை தான்‘விஸ்வாசம்.’ அஜித்துடன் மீண்டும் நயன்தாரா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ‘யோகி’ பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா உள்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைப்பில், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 10௦ சதவீதம் பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் சிவா கூறியுள்ளார்,