அப்பா கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் இருவரையும் இணைத்து வைத்து மிஸ்டர் சந்திரமவுலியை வெளியிட இருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன் .படத்தின் புரமோஷனுக்கு அப்பா வரவில்லை என்றாலும் மகன் கவுதம் வந்திருந்து கலகலப்பாக்கினார்.
கார்த்திக் ஏன் வரவில்லை என்பதற்கான காரணம் தற்போதுதான் தெரிந்திருக்கிறது,
முதல் காரணம் கவுதம் கார்த்திக்கு பெண் பார்க்கிறார்கள். அவருக்கு வயசு 28.
அடுத்த காரணம் கார்த்திக் புதிய படத்துக்காக தாடி வளர்க்கிறார். அவரது கையில் மூன்று கதைகள் இருக்கிறது. அதில் ஒன்றை அவரே இயக்கு நடிக்கப்போகிறார்.
மூன்றாவது காரணம் தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றிய ஆலோசனை. அது நடக்குமா இல்லையா என்பதைப் பற்றி இப்போதே ஆருடம் சொல்ல முடியாது. ஆனால் அவரை பலர் வற்புறுத்துகிறார்கள் என்பது உண்மை.
“கவுதமுக்கு 32 அல்லது 33 வயசுக்குள் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கிறோம். இப்போதே பெண் தேடும் வேலையை ஆரம்பிச்சாச்சு, அந்த வயசில கல்யாணம் பண்ணினால்தான் குடும்பப் பொறுப்பு பற்றி அவரால் தெரிஞ்சிக்க முடியும். இல்ல நானே ஒரு பெண்ணை லவ் பண்றேன்னு சொன்னாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ( ஜாய்ஸ் கவுதமிடம்.) என்கிறார் கார்த்திக்.
“ரஜினி ,கமல் அரசியல் பற்றி?”
“இப்ப பார்ட் டைமா பண்றதை புல் டைம் அரசியலா பண்ணனும்”என்கிறார் நவரசநாயகன்.
‘வெத்தில போட்ட ஷோக்குல ” பாட்டுக்காக குரலை மாற்றிப் பாட அது மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு வாய்ப்பாகி விட்டது.ஆனால் கார்த்திக்கின் வாய்ஸ் தற்போது முன்னைப்போல கணீர்!