ஒரு காலத்தில் இலியானாவுக்கு கோலிவுட்டும் கும்பிடு போட்டுக்கொண்டுதான் இருந்தது. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி இனிக்கத்தான் செய்தார்.
ஆனால் படக் கென சில படங்கள் படுத்துக் கொண்டதும் ரூட்டை மாற்றிவிட்டது கோலிவுட்.. கொஞ்சகாலம் டோலிவுட். அங்க வலுவாக கால் பதித்ததும் சடக்கென பாலிவுட் பறந்து விட்டார்.அங்கும் கொடி அவ்வளவாக பறக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் டோலிவுட் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது,
அடேங்கப்பா …சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு மரியாதை!
“எனக்கா இம்புட்டு வரவேற்பு ” என்று முதல் நாள் ஷூட்டிங்கில் ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார்.
காரணம் இல்லாமலா கார பூமி ஆட்கள் சிவப்பு கம்பளம் விரித்திருப்பார்கள்.?
“பிடிடா முழுக்கவர்ச்சியை” என கேமராவை சுற்ற விட்டிருக்கிறார்களாம்..