சிகரெட் பிடிப்பது மாதிரியான முதல் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட அதில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள், தளபதி விஜய்யும் இயக்குநர் முருகதாசும்!
‘சர்கார்’பட முதல் போஸ்டர் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை உருவாக்கி வருகிறது. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு பிறகு அந்த முதல் போஸ்டரை எடுத்து விட்டது தயாரிப்பு நிறுவனம்,
இதற்கிடையில் அடையார் புற்று நோய் மையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது.புகை பிடிப்பது மாதிரியான படத்தை விளம்பரம் செய்திருப்பதால் தங்களது புற்று நோய் மையத்துக்கு பத்துக் கோடி வழங்க வேண்டு என கேட்டிருக்கிறது.
இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு விஜய்,முருகதாஸ் இருவருக்கும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.