
“கச்சேரியில் என்னுடைய பாட்டைப் பாடனும்னா என்னுடைய முன் அனுமதியை வாங்கிட்டுத்தான் பாடணும்”னு தன்னுடைய உயிர் நண்பரான பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் விட்டவர்தான் இசைஞானி இளையராஜா.அதற்கு பின்னர் இருவரும் சகஜமாக பழகுவது கூட கிடையாது.
ஆனால் எஸ்.பி.பாலு?
உருகுகிறார் தன்னுடைய நண்பனைப் பற்றி!
“இளையராஜா ஒரு சுயம்பு. குரு இல்லாமல் வளர்ந்தவர். தென்னிந்தியாவில் இளையராஜா எஸ்.பி.பாலு காம்பினேஷன் இனி வரப்போவதில்லை. ஒரு நினைவின் நிற்கும் சம்பவம்.
தளபதி படத்துக்காக சுந்தரி பாடலுக்கு பதிவு செய்வதற்கு மும்பை சென்றிருந்தோம். சுந்தரி பாட்டுக்காக இன்ட்ரோ வாசித்ததும் மும்பை இசைக் கலைஞர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.”வஞ்சகம் இல்லாமல் பாராட்டுகிறார்.