“ஜெயிக்கணும்னு நினைத்தால் பாலைவனத்திலும் பைப் போட்டு தண்ணி எடுப்பாங்க நம்ம ஆளுங்க. கடும் உழைப்பாளிகள். அவர்களில் ஒருவர்தான் கங்கை அமரனின் மூத்த பிள்ளை வெங்கட் பிரபு. கையில் மிகப்பெரிய படம் இருக்கு. மாநாடு என்று பெயர் வைத்திருக்கிறார். மாநாட்டுக்கு தானா வர்ற கூட்டம் தான் சிறப்பு. சரக்கு,துட்டு ,பிரியாணி கொடுத்து திரட்டுற கூட்டம் வேஸ்ட்டு! அதனால வெங்கட் பிரபு ஸ்கிரிப்ட் ஒர்க்கில் கடுமையாக இருக்கிறார்.
“என்னுடைய படம்னா ஜாலியா படம் பண்ணுற ஆளுடைய படம்கிற நினைப்பு இருக்கு.அந்த இமேஜை மாநாடு உடைக்கும்!இந்த படம் வேற லெவல்” என்கிறார் வெங்கட்பிரபு.
“கதையை பண்ணி முடிச்சதும் ஒரு மாஸ் ஹீரோ நடிச்சால் தான் நல்லா இருக்கும்னு தேடினேன்.அப்பத்தான் திடீர்னு சிம்பு போன் பண்ணினார். பிக்ஸ் ஆகிட்டார்.இதுவரை தமிழ்ப்பட ஹீரோக்கள் எவருமே நடித்திராத கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். தூள் கிளப்பலாம். மத்த நடிக நடிகைகள் டெக்னிஷியன்கள் இன்னும் பிக்ஸ் ஆகல. செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஷூட்டிங் ஆரம்பமாகும் .படம் சம்மர் ரிலீஸ்.”என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர்.