புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளுக்கு கிளுகிளுப்பு கண்ணுக்குள்ளேயே கிடக்கும். ராத்திரி எப்ப வரும்டா சாமின்னு துடிப்பாங்க.போன், வாட்ஸ் அப்ல தான் அன்றைய பொழுதே ஓடும். புருசனின் பார்வை வேற பக்கமாக போயிடக்கூடாதேன்னு பெண்டாட்டியின் மனசும் எச்சரிக்கையாக இருக்கும்.
காதலித்து கல்யாணம் செய்து கொண்ட நாக சைதன்யா -சமந்தா இருவரின் மனநிலையும் அப்படித்தானோ!
சின்மயி பாடியிருந்த ஒரு பாட்டு சூப்பரா இருந்திருக்கு. மனம் திறந்து “ஆகா..சுத்தமான காற்று! சுவாசிப்பதில் சுகம்” என்று ஒரு தட்டு தட்டி விட்டார் நாக சைதன்யா,
பொங்கிவிட்டார் சமந்தா. ” நீ வீட்டுக்கு வா !நான் உனக்கு காட்டுறேன் எது ‘பிரீத் ஆஃப் பிரெஷ் ஏர்’ என்பதை!” பதிலுக்கு தட்டிவிட்டார்.
என்ன நடந்ததோ சற்று நேரத்தில் சமந்தாவின் பதிலைக் காணோம்.