எட்டுனா கழுத்தைப் பிடி எட்டலேன்னா காலைப் பிடிங்கிற கதையாகிப் போச்சு நடிகை ஸ்ரீ ரெட்டியின் நிலைமை.
ஆந்திராவின் மிகப்பெரிய நடிகர் நானி முதல் முக்கிய புள்ளிகளை எல்லாம் சந்திக்கு இழுத்து அவர்களை காமாந்தகாரர்கள் என கரும்புள்ளிகளை குத்தினார்.சில படங்களையும் வெளியிட்டு தலை காட்ட விடாமல் செய்தார். கோழியை ருசி பார்த்த குள்ளநரி அடுத்தடுத்த வீடுகளில் வாய் வரிசை காட்டுவதைப் போல தமிழ்நாட்டுப் பக்கமாகவும் வந்தார்.
ஏஆர் முருகதாஸ், ஸ்ரீ காந்த்,லாரன்ஸ் மாஸ்டர் என பட்டியல் போட ஆரம்பித்தார்.எவ்வித பலனும் இல்லையென புரிந்ததும் தெலங்கானா முதல் அமைச்சருக்கே செய்தியை தட்டியிருக்கிறார்.
“மதிப்பு மிக்க சி.எம்.,கே.சி.ஆர். அவர்களே! ( அடடா என்னே மரியாதை அம்மணி?)
“பிளீஸ். கொஞ்சம் கவனிங்க.எவ்வளவு நாளைக்குத்தான் நான் கஷ்டப்படுவேன். இந்த பிரச்னையில் அரசியல்வாதிகளும் இருக்காங்க. போதை மருந்து, ஹீரோயின்களுடன் உல்லாசம் என வாழ்றாங்க.அந்த உண்மைகளை சொன்னால் தாங்க மாட்டாங்க, என்னை அரசியல்வாதிகள் கொலை செய்து விடுவாங்க.நான் அரசியல் பக்கமா வரல. வாயை மூடிக்கிறேன்.
நடிகர் சங்கத்தில் உள்ள பெரிய ஆட்கள்தான் என்னை மன ரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் நீங்கள்தான் தெலங்கானாவின் தந்தை. எனக்கு நீதி கிடைக்கவேணும்.அந்த பெரிய மனிதர்களை விடாதீர்கள்.என்னை ஹைதராபாத்திலிருந்து வெளியேற்ற வேணாம்”
இப்படி ஒரு கடிதத்தை பேஸ் புக்கில் பதிவிட்டிருக்கிறார்.