ரோட்டில் பத்து ரூபாய் நோட்டு கிடந்தாலே விடமாட்டார்கள். எவனாவது பார்த்துவிடக்கூடாதே என்று லாவகமாக குனிந்து லபக் தான்! இத்தகைய பாரத பூமியில்தான் ஒரு அதிசயம் நடந்திருக்கிறது.
50 ஆயிரம் ரூபாய் ! ஏழை குடும்பம்னா அஞ்சு மாசத்துக்கு வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும்.
ஒன்னுக்கு போன சிறுவன் முகமது யாசினின் கண்களில் பட அதை அப்படியே வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்திருக்கிறான்.அந்த மகராசி அவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியையிடம் பணத்தை ஒப்படைத்திருக்கிறார். அவர் தலைமைப் போலீஸ் அதிகாரியிடம் கூட்டிச் சென்று விவரம் சொல்ல அந்த சின்னஞ்சிறு பாலகனை பாராட்டி பரிசுகள் வழங்கி இருக்கிறார். அந்த சிறுவன் முகமது யாசின் ஜவுளி வியாபாரியின் மகன்.
இதை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அந்த சிறுவனையும் பெற்றோரையும் தனது இல்லத்துக்கு வரவழைத்து பாராட்டினார்.அந்த சிறுவனுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்தார்.
“கள்ளங்கபடமற்ற அந்த சிறுவனை என் மகனாக நினைத்து படிக்க வைப்பேன் ” என்று கூறி இருக்கிறார்.