விமலுக்கு எங்கேயோ மச்சம் கிடக்கு. இல்லேன்னா கன்னட நடிகை தேடி வந்து ‘என்படத்துக்கு நீதான்யா ஹீரோ’ன்னு சொல்வாரா? காவேரியில் தண்ணீர் விட அடம் பிடிச்சாலும் காசு பார்ப்பதில் கன்னடத்து ஆட்கள் பலே ஆளுங்கதான்!
சர்மிளா மான்ரே கன்னட நடிகை .நாற்பது படம் வரை நடிச்சாச்சு. சொந்தமா ஒரு படம் பண்ணலாமேன்னு சென்னைக்கு வந்து முதல் படத்தை தமிழில் எடுக்கிறார். கூட சேர்ந்திருப்பவர் சாவந்த்.
தன்னை முதன் முதலில் கன்னடத்தில் அறிமுகப்படுத்திய ஏ.ஆர். முகேஷை தன் தயாரிப்புக்கு இயக்குநர் ஆக்கியிருக்கிறார். நன்றிக்கடன். இந்த உணர்வு எத்தன பேருக்கு இருக்கு? விமலுக்கு ஜோடி ஆஷ்னா சாவேரி, ஜாலியான படம்,ஆஷ்னாவை வைத்து இழுத்து மூடிக்கொண்டு படம் எடுக்க முடியுமா?
கவர்ச்சி சந்தையே நடத்திவிடமாட்டார்களா?