“வாரியா, கொஞ்ச நேரம் கொஞ்சி வெளையாடிட்டுப் போகலாம் .லாரி ஓட்டி சூடா இருப்பே. குளிர்ச்சியா இருக்கலாம் வாய்யா” என்று நெடுஞ்சாலைகளில் அழைப்பு விடுக்கும் ராக்கோழிகளை இன்றும் பார்க்கலாம். டார்ச்லைட் அடித்து கூப்பிடும் அவலம் இன்றும் இருக்கிறது. இதைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மஜீத்.
” இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள். ஆனால் நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் .இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து படமாக்கினேன்” என்று இயக்குநர் சொன்னாலும் சென்சார் சும்மா இருப்பார்களா? அதையும் கேட்டோம்.
“பெரும் போராட்டம் சார்., மும்பையில் சென்சார்! ஏ சர்டிபிகேட். சதா,ரித்விகா இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். படத்துக்கு பேரே டார்ச்லைட் ” என்கிறார் மஜீத்.