இயக்குநர்கள் என்கிற வரிசையில் பெரிய அளவில் நேற்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. பாக்யராஜ், சந்திரசேகர் ,எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் வந்திருந்தார்கள். பாரதிராஜாவைக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் மிகப்பெரிய அளவில் துக்கப்பட்டிருந்தார் பிரமாண்டங்களின் இயக்குநர் ஷங்கர்.
அவர் உக்ரைனில் மாட்டிக் கொண்டார்.
“மிகப்பெரிய தலைவர், தமிழ் அறிஞர் ,எழுத்தாளர், டாக்டர் கலைஞர் மறைந்தார் என்கிற செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது.தமிழுக்கும் தமிழர்க்கும் பேரிழப்பு. அவருக்கு இறுதி மரியாதை செலுத்த இயலாமல் உக்ரைனில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்.எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கறேன்.ஆன்மா அமைதி அடையட்டும்.”