கமல் என்றால் சிலருக்கு எகத்தாளமாக இருக்கும். அதிலும் அவர் அரசியலுக்கு வந்தபிறகு அவர்களுக்கு ஆகாத மனிதர் ஆகி விட்டார். அதிலும் சொந்த ஜாதிக்காரரையே இதில் துரோகி என காட்டியிருக்கிறார். விடுவார்களா? நூலிலேயே தூக்கில் தொங்க விட மாட்டார்களா என்ன?
விஸ்வரூபம் 2 புரிய வேண்டும் என்றால் அதன் முதல் பாகம் நினைவில் இருக்க வேண்டும். பர்ஸ்ட் பார்ட்டில் தப்பியோடிய அல்கொய்தா உமர் இந்த இரண்டாம் பாகத்தில் லண்டன்.டெல்லி இரண்டு நகரத்தையும் குண்டு வைத்துத் தகர்க்க திட்டமிடுகிறார்.
லண்டன் மாநகரத்தை அழிக்க மூழ்கிக்கிடக்கும் கார்கோ கப்பலில் இருக்கிற ராட்சத குண்டுகளை பயன்படுத்துவதற்கு திட்டம்.இதற்கு இந்தியன் எம்பசியில் இருக்கும் உயர் அதிகாரி மிஸ்டர் அய்யர் கைக்கூலி.
ரா அதிகாரி சேகர் கபூரின் உத்திரவின் பேரில் கமல், இவருக்குத் துணையாக ஆண்ட்ரியா, அணு ஆயுத எக்ஸ்பெர்ட் பூஜா குமார் ஆகியோர் உமரைத் தேடிச் செல்கிறார்கள். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறதா,உமரை பிடித்தார்களா,அல்லது மாட்டிக் கொண்டார்களா ,துரோகி மிஸ்டர் அய்யர் என்ன ஆகிறார் என்பதை ‘பக்கா ஹாலிவுட் ஸ்டைலில்’சொல்லி இருக்கிறார் கதாசிரியர், இயக்குநர் கமல்ஹாசன். அதாவது கதையை புரிவதற்கு மறுமுறை பார்க்க வேண்டியது வரும்.!
கமலின் நடிப்பைப் பற்றி விமர்சிப்பது எவரெஸ்ட் உயரமானது என்று சொல்வதைப் போலாகிவிடும். அடி, உதை, குத்து,கிஸ், நெருக்கம் இதெல்லாம் வெகு இயல்பு. அதுவும் மிஸ்டர் அய்யரிடம் வாயாடும் இடம் அருமை.வசனம் அழுத்தம்.அரசியல் இல்லாமல் இருக்குமா? “வெள்ளக்காரன் 200 வருசமா அடிச்ச கொள்ளைய 65 வருசமா இங்க உக்காந்துக்கிட்டு அடிச்சிட்டிருக்கீங்களே!” படு ஷார்ப் .இத மாதிரி நிறைய. அந்த சீனில் கமல் படு இயல்பா பேசி இருப்பார்.
கமலுக்கு உதடு கொடுக்கும் வாய்ப்பு ஆண்ட்ரியாவுக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால் கன்பைட் காஞ்சனா எல்லாம் அக்காவிடம் ட்ரெய்னிங் எடுக்கவேண்டும்.
கமலின் மனைவி பூஜா குமார் .கிடைத்த வாய்ப்பில் நெருக்கம் காட்டி உதடு கொடுத்து உதவி இருக்கிறார். ஸ்கூபா டைவர் என்பதால் தண்ணீருக்கு அடியில் தைரியமாக நடித்திருக்கிறார். படத்திற்கு பலம் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் இசையும் . ராணுவம் தொடர்பான காட்சிகள் பக்காவாக இருக்கிறது .
ஆங்கிலப் படங்களுக்கு இணையானது விஸ்வரூபம் .2